கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு யு.பி.எஸ். பொருத்தப்பட்டிருந்த அறைக்குள், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வெடிச்சத்தமும் அதைத் தொடர்ந்து கிளம்பிய புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் நோயாளிகள் பலி. இதனை அடுத்து மற்ற நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.