Sunday, December 3, 2023
Home » தூக்கிட்டு பெண் தற்கொலை: உடல் நலக்குறைவு காரணமா?

தூக்கிட்டு பெண் தற்கொலை: உடல் நலக்குறைவு காரணமா?

by Neethimaan


பெரம்பூர்: சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (37). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மீனா (27) என்பவருடன் திருமணம் நடந்தது. ஹரிகரன் (5), சாதனா (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மீனாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதனால் அவரது சொந்த ஊரான ஆந்திரா மாநிலம் நகரிக்கு சென்று தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 13ம் தேதி திரும்பினார்.

நேற்று காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார். மோகனசுந்தரமும் ஆட்டோ சவாரிக்கு சென்று விட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இரும்பு கம்பியில் கயிற்றால் தனக்கு தானே தூக்கு மாட்டி மயக்க நிலையில் மீனா இருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மீனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகனசுந்தரம் கதறி அழுதார்.

தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக மீனா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?