Sunday, September 24, 2023
Home » சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

by Ranjith

செங்கல்பட்டு: சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்பமுள்ள பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சவுதி அரேபிய அரசின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் நர்சிங் பட்ட படிப்பு (B.Sc Nursing )தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேற்படி, பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பெண் செவிலியர்கள், பிஎஸ்சி நர்சிங் படித்த 21 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபம் உள்ளவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு சம்பளம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் விவரங்கள் அறியலாம். மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685, 63791 79200, 044-2250 5886, 2250 2267) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பதிவு செய்வதற்கு ஏதுவாக செங்கல்பட்டில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை’ இன்று முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக முகாமிற்கு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணி விவரங்கள் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், B.Sc Nursing தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் பயனடையலாம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?