Saturday, April 20, 2024
Home » திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

by Ranjith
Published: Last Updated on

சமயபுரம்: திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(65). தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்தார். முதல் மனைவிக்கு நித்தியானந்தம் (30) என்ற ஒரு மகன் உள்ளார். இரண்டாவதாக லால்குடி அருகே கீழவங்காரம் பகுதியை சேர்ந்த வளர்மதி (48) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை இல்லை. தம்பதி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன் வளர்மதி, கணவரை பிரிந்து பெற்றோருடன் உள்ளார்.

இதனால் சண்முகசுந்தரம் தனியாக வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி சுசீலா சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக சுசீலா வந்தபோது சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். புகாரின்படி சிறுகனூர் போலீசார் வந்து விசாரித்தனர். இதில் அதிகாலையில் நாய்கள் தொடர்ந்து குரைத்துள்ளது. ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. பஞ்சமி நிலம் விற்பனை, குளம் ஆக்கிரமிப்புக்கு சண்முகசுந்தரம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததும், இதனால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாமா என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

one + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi