Sunday, July 13, 2025
Home செய்திகள் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம்

பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம்

by Lakshmipathi

* பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நிறைவு

* நெல் விதை விநியோக பணிகள் தீவிரம்

வலங்கைமான்: டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி குறுவை சாகுபடி பணிகள் தீவிரம். வலங்கைமான் தாலுகாவில் நடப்பாண்டில் சுமார் 8,000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன் பட்ட குருவையாக சுமார் 2000 ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாகமேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்டது.அக்காலகட்டங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பியே சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் காரணமாக உரிய நேரத்தில் சாகுபடி பணிகளை துவங்க இயலாமல் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே சாகுபடி பணிகள் துவங்கியது.

மேலும் அப்போது மூன்று போக சாகுபடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துக்கு இடையே மேற்கொண்டனர். இந்நிலையில் நடப்பு பருவத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணையினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர்திறக்கப்பட்டதை அடுத்து சாகுபடி பணிகள் கால தாமதம் இன்றி குறித்த நேரத்தில் துவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு வெட்டாறு வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது.

கடந்தாண்டு சுமார் நான்காயிரம் எக்டேரில் குருவையும் 8 ஆயிரத்து 950 ஹெக்டேரில் சம்பாவும் அதனை அடுத்து குருவை அறுவடைக்குப் பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ள ப்பட்டது.இவை அறுவடைப் பணிகள் முடிவுற்றள்ள நிலையில் கோடை சாகுபடி ஆக வலங்கைமான் மற்றும்ஆதிச்சமங்கலம் ,சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கோடை சாகுபடியாக பருத்தி சாகுபடி வலங்கைமான் தாலுகாவில் முடிவுற்ற நிலையில் கோடை சாகுபடியாக சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது .

தற்போது பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் குருவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. குறுவைப் பட்டம் சூன் – சூலை மாதங்களில் துவங்கும் இப்பருவம், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த குறுவைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.அதனை அடுத்துவலங்கைமான் தாலுகாவில் சுமார் 68,000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

வலங்கைமான் தாலுகாவில் குருவை சாகுபடி மொத்த இலக்கான 8000 ஏக்கரில் சுமார் முன்பட்ட குருவை சாகுபடி சுமார் 2000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது முன்பட்ட குருவையில் நேரடி விதைப்பு இயந்திர நடவு கை நடவு முறையில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இருப்பினும் நேரடி விதைப்பு புழுதி முறையில் மேற்கொள்ளப்படாமல் சேற்று உழவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது ஆட்கள் பற்றாக்குறை நிர்வாக செலவினம் குறைவு பருவநாட்கள் குறைவு போன்ற காரணத்திற்காகவே விவசாயிகள் அதிக அளவில் நேரடி விதைப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் இந்த ஆண்டு அதிக அளவில் முன்பட்ட குறுவையில் நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது சேற்று உழவு மூலம் நேரடி விதைப்பு அதிக அளவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாகதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆட்சி காலத்திற்கு உள்ளாகவே பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவசம் மின் இணைப்பு வழங்கியது மற்றும் மேட்டூர் அணை முன்கூட்டியே பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிவாய்க்கால்கள் தூர்வாரியது குறை பட்டத்தில் இயந்திரம் நடவிற்கு தொகுப்பு வழங்குவது.வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தட்டுப்பாடு இன்றி வழங்குவது போன்ற காரணங்கள் வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குருவை சாகுபடி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குருவை சாகுபடி உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கான அனைத்து முன்னெடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi