சென்னை: சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனது நிலம் எனக்கூறி பட்டா கேட்டவருக்கு ரூ.25,000 அபராதம் ஐகோர்ட் விதித்தது. உண்மை தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி வழக்கு தொடுத்த சென்னை பாடியை சேர்ந்த பச்சையப்பன் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை ஆக.27க்குள் பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு செலுத்த நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டார். மனுதாரர் பட்டா கோரும் நிலம் திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என அறநிலையத்துறை பதில்மனு தாக்கல் செய்தது.