மதுரை: நிதி நிறுவன மோசடி வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு அளித்துள்ளது. பறிமுதல் செய்த அல்லது முடக்கிய சொத்துகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். 1,249 நிதி நிறுவன மோசடி வழக்குகளில் இதுவரை ரூ.827.67 கோடி மற்றும் சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதிபதி தகவல் தெரிவித்துள்ளனர்.