குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெல்ல வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த தோல்விக்கு அந்த அணி பவுலர்கள் வீசிய ‘நோ பால்’களும் முக்கிய காரணம். இந்த போட்டியின்போது மழை அடிக்கடி குறுக்கிட்டது. இறுதிக் கட்டத்தில் வெற்றியை தீர்மானிக்க, ஒரு ஒவரில் குஜராத் அணி, 15 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஓவரை மும்பையின் தீபக் சஹர் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் ஒரு ரன் தந்த தீபக், 3வது பந்தில் சிக்சரை வாரி வழங்கினார்.
அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் 4வது பந்தை நோ பாலாக வீசினார். அப்போது ஒரு ரன்னும் ஓடப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5வது பந்தில் கோட்ஸீ அவுட்டானார். கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுத்து குஜராத் த்ரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘நோ பால் வீசுவது பெருங்குற்றம். அதனால், இப்போட்டியில் நாங்கள் தோற்க நேரிட்டது’ என வருத்தத்துடன் தெரிவித்தார்.