Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு துவங்கியது

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்குகளை செலுத்தும் பணி இன்று துவங்கியது.ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கு திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,526 பேர் உள்ளனர். இவர்களில் 209 பேரும், மாற்றுத்திறன் வாக்காளர்கள் 47 பேரும் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்திட விருப்பம் தெரிவித்திருந்தனர். சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு இன்று காலையில் 4 குழுக்களாக பிரிந்து சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

இந்த 4 குழுவினரும் ஈரோடு, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள தபால் வாக்குகளைச் செலுத்தவுள்ள வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வாக்காளரின் அடையாளத்தை சரிபார்த்து, அதன் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பத்தை பெற்று வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டை வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் வாக்களித்த பின்னர், வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று தொடங்கி, 24, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குழுவினர் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளை மேற்கொள்வார்கள்.