Saturday, May 17, 2025
Home செய்திகள்Showinpage சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

by Nithya

சென்னை: சென்னையில் கே.கே.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், சாலிகிராமம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகரில் மருத்துவர் வரதராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நிறுவன மேலாண் இயக்குனர் குணசேகரன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

சைதாப்பேட்டையில் தனியார் நிறுவன இயக்குனர் அலங்கநாதனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விருகம்பாக்கம் காவேரி தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பாண்டியன் வீட்டில் 2021 -ல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தியது. 2021-ல் சோதனையின் போது ரூ.1.37 கோடி, 3 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi