Sunday, June 15, 2025
Home மாவட்டம்சென்னை கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் வாகனங்கள் அகற்றம்

கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் வாகனங்கள் அகற்றம்

by Arun Kumar


ஆலந்தூர்: கிண்டி சிட்கோ வளாக பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு சிட்கோ நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிட்கோ வணிக வளாக பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட தனியார் வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அதன்படி, 21 தனியார் வாகனங்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அங்கிருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து சிட்கோ அதிகாரிகள் கூறுகையில், ‘சிட்கோ வளாகத்தில் அதிகளவு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, பறிமுதல் செய்திருக்கிறோம். மேற்கண்ட வாகனங்களுக்கு உரிமை கோருபவர்கள் 10 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி, இனி இங்கு வாகனங்களை நிறுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எழுதி கொடுத்துவிட்டு வாகனங்களை பெற்று கொள்ளலாம்,’ என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi