சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய எக்கு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள், சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், ஹெவி பஸ் டிரைவர், பிரஸ் டோல் & ஷீட் மெட்டல் டை தயாரிப்பாளர், சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் பொறியாளர், உற்பத்தி பொறியாளர், க்யூ ஏ/ க்யூ சி ஆவணக் கட்டுப்படுத்தி, தொழில்துறை மின் எலக்ட்ரீஷியன், கருவி தொழில்நுட்ப வல்லுநர்கள் (ஆட்டோமேஷன்), டீசல் என்ஜின்கள் மற்றும் பட்டறை இயந்திர பராமரிப்பு, ஸ்பிளிட் ஏசி/ விண்டோ ஏசி/ சென்ட்ரல் ஏசி தொழில்நுட்ப வல்லுநர், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளுக்கான நேர்காணல் இன்று மற்றும் நாளை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் & காப்பி) & போட்டோ ஆகியவற்றுடன், “அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32” என்ற முகவரிக்கு நேரில் அணுகவும்.