சென்னை: மின் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மின்சாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின்வாரிய செயலாளர் மணிக்கண்ணன் உடனிருந்தனர்.
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை
previous post