Saturday, September 23, 2023
Home » கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது:  ஐகோர்ட் உத்தரவு

கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது:  ஐகோர்ட் உத்தரவு

by MuthuKumar

சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலூ ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை பொறுத்தவரையில் ஏற்கனவே நீதிமன்றம் பிறபித்த உத்தரவில் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், சிறப்பு பணி ஆதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் மாநிலம் முழுவதும், 30,473 கோயில்களில் அறங்காவலர் பணிக்கு ஆண்லைம் மூலமாக விண்ணபிக்க வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளதாகவும், இதில் 4,313 விண்ணப்பங்கள் பெறபட்டு 3,187 பேர் நியமிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 38 மாவட்டங்களில் இருக்க கூடிய மாவட்ட குழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டுள்ளவர்களின் விபரங்கள் நாளை இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட குழுக்களுக்கு தேர்வு செய்யபட்டவர்கள் பெரிய அளவில் பதவி பிரமாணம் செய்து கொள்வதாகவும், அவர்கள் அரசியல் கட்சி சார்ந்து இருப்பதகாவும் புகார் முன்வைக்கபட்டது. இதனை அடுத்து மாவட்ட குழுக்களுக்கள் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன் அறங்காவலர் பணிக்கு விண்ணபித்தவர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அதன் மூலமாக பொதுமக்கள் ஆட்சியேபம் தெரிவிக்க முடியும் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாவட்ட குழுக்களில் அரசியல் வாதிகள் நியமிக்கபடுவதாக கூறப்படும் குற்றசாட்டுகளை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த குழுக்களில் அரசியல் சார்புடையவர்கள் நியமிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தனர். பின்னர் இந்த குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவது போறவற்றில் ஈடுபடகூடாது என்றும், மீறினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக கால அட்டவணையை தக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?