Thursday, May 22, 2025
Home செய்திகள்Banner News 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

by Lavanya

சென்னை: 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர்,

*மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*2025ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.53 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

* மாநில மகப்பேறு செவிலியர் பயிற்சி நிறுவனம், தேசிய பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

*அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டம் விரைவில் மதுரையில் தொடங்க திட்டம்

* டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.

* சிதலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

*சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147.00 கோடியில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டப்படும்.

*4 அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் சேவைகள் வழங்கப்படும்.

* கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் நிறுவப்படும்.

* 44 அரசு சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும்

*கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடி மதிப்பில் உயர் சிறப்புச்சிகிச்சைக்கு புதிய கட்டடம் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.

*போதை தரக் கூடிய மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்.

* 4வது பொது சுகாதார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும் .

*ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.15 கோடியில் இதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் நிறுவப்படும் .

* 75 புதிய அவசரகால ஊர்திகள், 38 இலவச அமரர் ஊர்திகள் உள்ளிட்டவை ரூ.26.71 கோடியில்

ஐநா சபையால் விருது பெற்ற திட்டம் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi