Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறையும் இந்தியாவுக்கு தேவை: ராகுல் காந்தி

ஒடிசா: சுதந்திரத்தின் அடிப்படை கல்வி. இது சிலருக்கு சலுகையாக மாறிவிடக்கூடாது. எனவே நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறையும் இந்தியாவுக்கு தேவை என மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'இந்தியாவில், உயர் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் அதிக எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்த பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை. கல்வி முறையில் பழங்குடியினர், நடுத்தர மற்றும் கீழ் சாதியினரின் வரலாறு மற்றும் மரபுகளைச் சேர்க்க விரும்புகிறேன்,' என்று ஒடிசாவில் சிலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நாட்டின் கல்வி முறை குறித்து உரையாடலின் போது மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மேலும் 'கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் அறிவியல் உணர்வு, தர்க்கம் மற்றும் சுதந்திர சிந்தனை குறைந்து வருகிறது. இது பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி ஆர்வம், சுதந்திர சிந்தனை மற்றும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக கேள்விகளைக் கேட்கும் பழக்கத்துடன் தொடங்குகிறது.

இது சுதந்திரத்தின் அடித்தளம் மற்றும் ஒரு சிலரின் சொத்தாக இருக்கக்கூடாது. விஞ்ஞான உணர்வை வளர்க்கும், விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்வி முறை இந்தியாவிற்குத் தேவை' எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.