டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக கோரிய நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு வழங்க அதிமுக கோரியிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது உள்துறை அமைச்சகம்..!!
0