சென்னை: இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிட மாடல் அரசின் உறுதியான நடவடிக்கைகளால் 5 மாதங்களில் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பே சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி சார்தான்: அமைச்சர் ரகுபதி பதிலடி
0