புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டியில், "ED, மோடி எதற்கும் நாங்கள் பயப்படமாட்டோம். மாநிலத்தின் நிதி உரிமையை கேட்கவே முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு. புதுக்கோட்டையில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி இவ்வாண்டு இறுதியில் முடிவடையும்"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement


