Saturday, July 19, 2025
Home மருத்துவம்இயற்கை மருத்துவம் வாசகர் பகுதி – மருந்தாகும் சுக்கு, மிளகு, திப்பிலி

வாசகர் பகுதி – மருந்தாகும் சுக்கு, மிளகு, திப்பிலி

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

*சுக்கு, மிளகு, அதிமதுரத்தை நீரில் இட்டு ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்தால் இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும்.

*சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

*ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் விட்டு பாதியாக காய்ச்சி பால், சர்க்கரை ேசர்த்து இருவேளை சாப்பிட்டு வர வாயு அகலும். பசி உண்டாகும். தலை சம்பந்தப்பட்ட நோய்கள், சீதளம்,
குடல் புண், வயிற்று வலி, பல்வலி, ஆசன வலி மற்றும் ஆஸ்துமா குணமாகும்.

*மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம் பூ மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளை உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். ஒரு மாத்திரை வீதம் இருவேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.

*இருமல் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலை காய்ச்சாமல் அதில் சிறிது மிளகையும், மஞ்சள் தூளையும் கலந்து குடித்துவர குணமாகும்.

*மிளகுத்தூள், வெங்காயம், உப்பு சம அளவு சேர்த்து அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர புதிய தலை முடி வளரும்.

திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இருவகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே பயன்படுத்துவார்கள்.

*திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், ஜுரம், சளி ஆகியவை குணமாகும்.

*திப்பிலியை பொடி செய்து, குப்பைமேனியை முழு செடியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, சம அளவு திப்பிலியை கலந்து சாப்பிட்டு வர பவுத்திரம் தீரும்.

*திப்பிலி 5 பங்கும், தேற்றான் விதை மூன்று பங்கு அளவும் பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து இருவேளை வீதம் மூன்று நாட்கள் குடித்து வர பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

தொகுப்பு: எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi