சென்னை: திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 16ம்தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16ம்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில், செப்டம்பர் 18ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.