துவரம்பருப்பு-அரை கப்,
முருங்கைக்காய்-2,
பெரிய வெங்காயம்-1,
தக்காளி-3,
பச்சை மிளகாய்-2,
இஞ்சி-ஒரு துண்டு,
பூண்டு-4 பல்,
மல்லித்தழை-ஒரு கைப்பிடி,
மஞ்சள்தூள்-கால் டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
தேங்காய்ப்பால்-அரை கப் அல்லது எலுமிச்சம்பழச் சாறு-புளிப்புச் சுவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க:
மிளகு-கால் டீஸ்பூன்,
சோம்பு-கால் டீஸ்பூன்,
சீரகம்-கால் டீஸ்பூன்.
செய்முறை:
பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியைப்பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயை 3 அங்குலத் துண்டுகளாக நறுக்கிவையுங்கள். வறுத்துப்பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்துப் பொடியுங்கள். இஞ்சி, பூண்டை தோல்நீக்கி நசுக்கிக் கொள்ளுங்கள்.வெந்தபருப்பில் 2 கப் தண்ணீர், காய்கள், வறுத்துப் பொடித்த பொடி, இஞ்சி, பூண்டுஎல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் போட்டு 2 விசில் வைத்து இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும்ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டுங்கள். விருப்பம் போல தேங்காய்ப்பால் அல்லது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பரிமாறுங்கள்.