தேவையான பொருட்கள்
2 கப் இட்லி மாவு
1& 1/2 கப் முருங்கைக்கீரை
1 வெங்காயம்
1 டேபிள் ஸ்பூன் மிளகுப்பொடி
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
தாளிக்க :
1 டீஸ்பூன் எண்ணை
கடுகு
கடலை பருப்பு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.முருங்கை இலைகளை பிரித்து, நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் தெளித்து,ஐந்துநிமிடங்கள் மூடிவைக்கவும்.பின்னர் எடுத்து தேங்காய் துருவல் கலந்து இறக்கி வைக்கவும்.சூடாறியவுடன் முருங்கை இலை, மிளகு மசாலாவை எடுத்து தயாராக வைத்துள்ள இட்லி மாவில் கலந்து வைக்கவும்.பின்னர் பணியாரம் செய்யும் தவாவை சூடு செய்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணை ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப்போட்டு மறுபக்கம் நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.இப்போது சுவையான மிளகு, மசாலா காரம் கலந்த, காரசார முருங்கை இலை, மிளகு மசாலா பணியாரம் சுவைக்கத்தயார்.