Tuesday, July 8, 2025
Home செய்திகள்Banner News போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி மாரத்தான் நடைபெறுவதால் ஆவடியில் நாளை (ஜூன் 26) போக்குவரத்து மாற்றம்

போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி மாரத்தான் நடைபெறுவதால் ஆவடியில் நாளை (ஜூன் 26) போக்குவரத்து மாற்றம்

by Suresh

வருகின்ற 26.06.2025 (வியாழக்கிழமை) அன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 5 கி.மீ தூரத்திற்க்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது.

இந்த மாரத்தான் ஓட்டபந்தய போட்டி சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடியில் நடைபெறுவதால் தமிழ்நாடு காவலர் மாநாட்டு மையம் (Police convention center) இடத்திலிருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை பரணி உணவகம் வரை 26.06.2025 அன்று காலை 06.00 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. எனவே மேற்படி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியை முன்னிட்டு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்பட உள்ளது.

1. வணிக வாகனங்கள் (Commercial Vehicle)
1) வணிக வாகனங்கள் (Commercial Vehicle) காலை 05.00 மணி முதல் சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் நெமிலிச்சேரி ரவுன்டானவிலிருந்தும் ஆவடி காமராஜர் சிலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாகனங்கள் 400 அடி புற வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
2) ஆவடி அண்ணா சிலை சந்திப்பிலிருந்தும் வணிக வாகனங்கள் அம்பத்தூர் நோக்கி செல்ல வேண்டும். வாகனங்கள் ஆவடி புதிய இராணுவ சாலை (New Military Road) சின்னம்மன் கோவில் வழியாக அம்பத்தூர் செல்ல வேண்டும்
3) ஆவடி அண்ணா சிலையில் இருந்து அம்பத்தூர் நோக்கி நேராக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாகனங்கள் HVF சாலை மோரை மற்றும் வீராபுரம் வழியாக சென்று 400 அடி புற வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
4) ஆவடி HVF சாலையில் உள்ள அஜயா ஸ்டேடியத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இவ் வாகனங்கள் ஆவடி அண்ணா சிலை புதிய இராணுவ சாலை (New Military Road) மற்றும் சின்னம்மன் கோவில் வழியாக அம்பத்தூர் செல்ல வேண்டும்.
5) அம்பத்தூர் சிங்கப்பூர் பிளாசா (Rakki Theatre) சந்திப்பிலிருந்து ஆவடி நோக்கி வணிக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவ் வாகனங்கள் செங்குன்றம் சாலை வழியாக GNT சாலை 400 அடி புற வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.
6) திருமுல்லைவாயில் அம்பேத்கார் சிலை சந்திப்பிலிருந்தும் ஆவடி நோக்கி வணிக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவ் வாகனங்கள் ராக்கி திரையரங்கம் வழியாக செங்குன்றம் சாலை GNT சாலை 400 அடி புற வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

ii.பொது மக்கள் பயன்படுத்தும் இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள்
1) ஆவடியிலிருந்து அம்பத்தூர் நோக்கி செல்லும் இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆவடி அண்ணாசிலை அருகில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பரணி உணவக்தில் இருந்து வலது புறம் திரும்பி ஒரே பாதையில் தமிழ்நாடு காவலர் மாநாட்டு மையம் (Police convention center) VGN Road சந்திப்பு வரை (அம்பத்தூரிலிருந்து ஆவடி நோக்கி வரும் வாகனங்கள் பாதையில்) செல்ல அனுமதிக்கப்படும்.
2) அண்ணணுரிலிருந்து வரும் வாகனங்கள் சத்திய மூர்த்தி நகரருக்கு CTH சாலையை கடக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதே போன்று சத்திய மூர்த்தி நகரிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணணூர் செல்ல CTH சாலையை கடக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
3) அண்ணணூரிலிருந்து சத்திய மூர்த்தி நகருக்கு செல்லும் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் CTH சாலையில் இடது புறம் திரும்பி ஆவடி அண்ணா சிலையில் வலது புறம் திரும்பி Ajeya Stadium அருகில் வலது புறம் திரும்பி சத்திய மூர்த்தி நகர் செல்லாம். சத்திய மூர்த்தி நகரில் இருந்து அண்ணணூர் செல்லும் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் சத்திய மூர்த்தி நகர் சாலையில் வலது புறம் திரும்பி Ajeya Stadium சென்று இடது புறம் திரும்பி ஆவடி அண்ணா சிலை இடது புறம் திரும்பி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பரணி உணவகம் வலது புறம் திரும்பி CTH ஒரு வழி சாலையில் அண்ணணூர் செல்லலாம்.
4) சத்திய மூர்த்தி நகரில் இருந்து அண்ணணூணூர் அல்லது ஆவடி செல்லும் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் குடியிருப்பின் பின் பக்க வழியாக VGN, CTH சாலை சந்திப்பில் அம்பத்தூர் அல்லது ஆவடி நோக்கி செல்லலாம்.
5) மேற்படி போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் 26.06.2025 வியாழக் கிழமை அன்று காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை செயல்படுத்தப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi