Saturday, December 2, 2023
Home » கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

by Dhanush Kumar

சென்னை: அயனாவரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் குமார். இவரது மகன் லோகேஸ்வரன் (16), அயனாவரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், ஆவடியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது, தனது 5 நண்பர்களுடன் ஆவடி கோயில்பதாகை கணபதி நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு, கால்வாய் பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்து விளையாடியபோது தண்ணீரில் மூழ்கி லோகேஸ்வரன் அடித்துச் செல்லப்பட்டார்.

இதை பார்த்து நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு திரண்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் லோகேஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 3வது நாளான நேற்று, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் பெத்தூர் கன்னடபாளையம் அருகே லோகேஸ்வரன் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், லோகேஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?