Thursday, July 17, 2025
Home செய்திகள் எடப்பாடி வலியுறுத்தல்: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணத்தை உயர்த்த கூடாது

எடப்பாடி வலியுறுத்தல்: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணத்தை உயர்த்த கூடாது

by Neethimaan


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்திவிட்டு சுலபமாக வீடு கட்டும் அனுமதியைப் பெறலாம் என்று நாக்கில் தேன் தடவிவிட்டு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் ‘சொந்த வீடு’ என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போகச் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.

சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் 1000 சதுர அடிக்கு சுமார் ரூ 46,000-லிருந்து ரூ 1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi