சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்ட செயலாளர்களை தொடர்புகொண்டு பேசினேன். அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, “தமிழ்நாடு தொடர்ந்து தலை நிமிர்ந்து நடைபோட திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி தொடர மக்கள் விருப்பம் முதல்வர் எக்ஸ்தள பதிவு
0