சென்னை: திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அதிகாரிகளின் சிறப்பான பணியால் மக்களை சென்றடைந்துள்ளது என கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அரசு உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உட்கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் திட்ட செலவு அதிகமாகும் எனவும் 4 மாவட்ட ஆட்சியர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.