சென்னை: திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில செயலாளரும் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கை; திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் வருகின்ற 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.