சென்னை: மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்தை திமுகவில் இருந்து தற்காலிமாக நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாநகர் மாவட்டம், 57வது வார்டை சேர்ந்த பொன்வசந்த் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்து மதுரை மேயரின் கணவர் தற்காலிக நீக்கம்
0