சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாடைகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தியாகராயர் நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேட்டில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.