தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டையாம்பட்டியில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

ஆட்டையாம்பட்டி, ஜன.25: ஆட்டையாம்பட்டியில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆட்டையாம்பட்டி மளிகை கடைவீதியில் முறுக்கு வியாபாரம் செய்து வருபவர் பழனியம்மாள் (80). இவர் வியாபாரம் செய்த பணம் மற்றும் தான் அணிந்திருந்த 7 பவுன் செயினை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2 நாள் முன்பு, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மூதாட்டியின் 7 பவுன் செயினை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து மூதாட்டி ஆட்டையாம்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்ஐ தமிழ்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார் இனாம் பைரோஜி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டதில் அவர் பழனியம்மாளின் நகையை திருடியது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பிச்சம்பாளையம் பூஞ்சோலைகாடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார்(23) என்பதும், திருமண விசேஷங்களுக்கு சமையல் கான்ட்ராக்டராக இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில், கடனை அடைப்பதற்காக, தனது பாட்டியான பழனியம்மாளின் நகையை திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து, சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையிலடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News