தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர், அக்.4: திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் மதகுகள் சீரமைப்பு, கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சியில் திருநின்றவூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு 5 மதகுகள் உள்ளன. ஏரிக்கரையின் நீளம் 4,816 மீட்டர், நீர்ப்பிடிப்பு பகுதி 892.71 ஹெக்டேர் ஆகும். இந்நிலையில் ஏரியின் மதகுகள் கடந்த மழை காலங்களில் சேதம் அடைந்ததால் உபரிநீர் வீணாக வெளியேறி குடியிருப்புகளில் சூழ்ந்தது. எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் மதகுகளை சீரமைக்கவும், கால்வாய் சுத்தம் செய்யவும் ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஏரியின் 3ம் எண் மதகு (ராமர் மதகு) கடந்த ஆண்டு பருவமழையின் போது, மிகவும் பாதிக்கப்பட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது. இம்மதகினை சீர் செய்ய ₹30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மதகினை சீர் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது. மேலும் கூடுதலாக கதவணை பொருத்தும் பணியும் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கதவணையில் அதிகபட்சமாக 25 முதல் 30 கன அடி வரை தண்ணீரை வெளியேற்றலாம். மேலும், கடந்த ஆண்டு பருவமழையின் போது, திருநின்றவூர் ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முடியாமல், ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது 3ம் எண் மதகினை சீரமைத்து கதவணை பொருத்தியதன் மூலம் வெள்ள காலங்களில் உபரி நீரை சுலபமாக வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், விவசாய பயன்பாட்டிற்காக இந்த மதகில் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக ₹20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மதகு எண் 3லிருந்து செல்லும் கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி 5 கி.மீ. நீளத்திற்கும், மதகு எண் 4லிருந்து செல்லும் கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி 2 கி.மீ. நீளத்திற்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், வெள்ள காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News