தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே நூதன முறையில் மாந்திரீகம் செய்வதாக இளம்பெண்ணிடம் நகை அபேஸ் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது

விழுப்புரம், பிப். 6: விழுப்புரம் அருகே நூதன முறையில் மாந்திரீகம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் இருந்து நகை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே சின்னகுப்பத்தை சேர்ந்தவர் பாலா மனைவி சூர்யகலா(22). இவரது கால்பவுன் கம்மல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொலைந்துவிட்டதாம். இந்நிலையில் பக்கத்துவீட்டை சேர்ந்த மணிபாலன் மனைவி கவுரி (26) என்பவரிடம் சென்று கம்மலை காணவில்லை என்று சூர்யகலா கூறினார். அப்போது அவர் மாந்திரீகம் செய்தால் சரியாகிவிடும், தொலைந்துபோன நகை கிடைத்துவிடும் என கூறினாராம். மேலும் வீட்டில் உள்ள மற்ற நகைகளை கொண்டு வருமாறும், அதனை வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய சூர்யகலா தன்னிடமுள்ள 3அரை பவுன் நகைகளை கவுரியிடம் கொடுத்துள்ளார்.

Advertisement

அந்த நகைகளை பெற்றுக்கொண்ட கவுரி மாந்திரீகம் செய்து கொடுக்கிறேன் என்று கூறினாராம். பின்னர் 2 நாட்கள் கழித்து விபூதி மற்றும் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிய சூர்யகலா பீரோவில் வைத்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு முன்பு சூர்யகலா அந்த நகைகளை அடகு வைக்க சென்றபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யகலா இதுகுறித்து வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று கவுரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன், டிஜிட்டல் என வளர்ந்து வரும் நவீன காலத்திலும் கிராமப்புறங்களில் மாந்திரீகம் போன்ற கட்டுக்கதைகளை கூறி பணம், நகை அபேஸ் செய்யும் சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. எனவே பொதுமக்கள் தான் உஷாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News