தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரமடை அருகே காட்டுயானைகள் அட்டகாசம் தென்னைமரங்கள் சேதம்

காரமடை,மார்ச்20: காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீலியூர்,காளம்பாளையம்,மணல் புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வன விலங்குகள் சர்வசாதாரணமாக ஊருக்குள் உலா வர துவங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சீளியூர் பகுதியைச் சேர்ந்த திருமயம்(54) என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 4 யானைகள் கூட்டமாக வந்துள்ளன. அவை அங்கிருந்த சுமார் 50 க்கும் தென்னை மரங்களை வேரோடு முறித்து தின்றும்,மிதித்தும் சேதப்படுத்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பின. நேற்று காலை தோட்டத்திற்கு வந்த திருமயம் காட்டு யானைகளால் சேதம் செய்யப்பட்ட தென்னைகளை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினரும்,சேத மதிப்பீடு குறித்து கணக்கீடு செய்து சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement