Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை காட்பாடி அருகே

வேலூர், பிப்.14: காட்பாடி அருகே கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி பிரம்மபுரம் தாங்கலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி(33). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடநலகுறைவால் பன்னீர் செல்வம் உயிரிழந்தார். கணவர் இறந்த சோகத்திலும், குழந்தை இல்லாத ஏக்கத்திலும் சாமுண்டீஸ்வரி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாமுண்டீஸ்வரி, கணவர் நினைவு நாளான நேற்று வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பிரம்மபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமுண்டீஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.