தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம்: விடுமுறை குழப்பத்தால் பொதுமக்கள் வருகை குறைந்தது

திருவண்ணாமலை, செப்.17: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை நேற்று வெகுவாக குறைந்திருந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவிவர்மா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சரண்யாதேவி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 127 பேர் மனு அளித்தனர். பொதுமக்களின் மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், 16ம் தேதி (நேற்று) மிலாடிநபி அரசு விடுமுறை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடுமுறையை 17ம் தேதிக்கு மாற்றி அரசு அறிவித்தது. எனவே, திங்கட்கிழமை விடுமுறையாக இருக்கும் என்ற எண்ணத்தில், நேற்று நடந்த குறைதீர்வு முகாமிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

அதனால், காலை 11 மணியளவிேலயே குறைதீர்வு கூட்டம் நடந்த அரங்கில் பொதுமக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று சாதாரண நாட்களை போல காட்சியளித்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணைந்து வரும் 21ம் தேதி திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. அதில், 120க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆட்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெற உள்ளது. அதையொட்டி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்பணர்வு பிரசார வாகனத்தை நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement