தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 6000 கனஅடி நீர் வெளியேற்றம்

 

Advertisement

சின்னசேலம், டிச. 2: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே சேமிப்பது வழக்கம். கோமுகி அணை நிரம்பிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சம்பா பருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. மேலும் நேற்றுவரை கோமுகி ஆற்றில் வினாடிக்கு 120 கனஅடியும், புதிய பாசன கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி நீரும் பாசனத்திற்கு திறந்துவிடப்பட உள்ளது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கல்வராயன்மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது. மேலும் நேற்று அதிகாலை 5 மணிவரையில் அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் திடீரென்று அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்தது. அதன்பின் 11.30 மணியளவில் வினாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் கரைகளின் பாதுகாப்பு கருதி அணையில் 44 அடி நீரை தேக்கி வைத்துக்கொண்டு உபரி நீர் வினாடிக்கு 4000 கனஅடி கோமுகி ஆற்றில் அணையின் பிரதான ஷெட்டர் வழியாக திறந்து விட்டனர். மதியம் 1 மணியளவில் கல்வராயன்மலை ஆறுகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கனஅடி நீரை திறந்து விட்டனர்.

கோமுகி ஆற்றில் நீரை திறந்து விடுவதற்கு முன்பாக வடக்கநந்தல், கச்சிராயபாளையம், மேட்டுப்பாளையம், அக்கராயபாளையம், ஏர்வாய்பட்டிணம், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமாண்டார்குடி உள்ளிட்ட கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி அபாய சங்கு ஒலிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது கோமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரை பாலங்களில் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Advertisement

Related News