வக்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு
Advertisement
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், “பாஜ அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா, வக்பு சொத்துகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். பாசிச பாஜ அரசின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகளிலிருந்து, கட்சி, அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, சிறுபான்மை சமூக மக்களை பாதுகாக்க கரம் கோர்த்திட வேண்டும். இந்த வக்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிடும் வரை எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் போராட்டம் தொடரும்” என்றார்.
Advertisement