Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாங்கும் பொருட்களுக்கு பில் அவசியம்

சிவகாசி, ஜூலை 31: பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டு வாங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் பில் கேட்டு வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ, அக்மார்க், ஹால்மார்க் முத்திரை பெற்ற பொருட்களையே வாங்க வேண்டும். எடை அளவு சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து மாத்திரை, மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும். நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள், வியாபார நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்.

ரேஷன் கடை விநியோகத்தில் உள்ள குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், இணை பதிவாளர் கூட்டுறவுத்துறை, வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பொருட்களின் எடையளவு, எடை கற்கள், தராசு போன்றவற்றில் குறைகள் இருந்தால் தென்மண்டல இயக்குநர், தரக்கட்டுப்பாடு அலுவலகம், சென்னை-13 என்ற முகவரியில் புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.