தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹவுரா எக்ஸ்பிரசில் கடத்திய 9 கிலோ கஞ்சா பறிமுதல்

விருதுநகர், நவ. 13: விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் தொடர்புடையோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை விருதுநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலின் பெட்டிகளில் விருதுநகர் ரயில்வே போலீசார் அய்யாசாமி, பொன் தனசேகரன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, ஒரு பெட்டியில் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை போலீசார் சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை ராமநாதபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனர். ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement