Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூதாட்டி மர்ம சாவு

சிவகாசி அருகே ரிசர்வ்லையனை சேர்ந்தவர் குருவையா மனைவி பழனீஸ்வரி (64). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மகன் குருவையா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் பழனீஸ்வரி தனது கடைசி மகன் யோகேஸ்வரனுடன் வசித்து வந்தார். திருமணம் முடியாத யோகேஸ்வரன், குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை மூதாட்டி பழனீஸ்வரி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பழனீஸ்வரி மயங்கி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மூதாட்டி பழனீஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.