சிவகாசி, டிச. 10: வெம்பக்கோட்டை அருகே மேலாண் மறைநாடு செல்லம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (80). இவர் நேற்று முன்தினம் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டிக்குள் வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் குமார் (51) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


