சிவகாசி, டிச. 10: சிவகாசி நகர் கிழக்கு எஸ்ஐ ரபியம்மாள் மற்றும் போலீசார் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனம்பட்டி பஸ் ஸ்டாபில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் (25), பட்டாசு ஆலை தொழிலாளி வல்லரசு (24) ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
+
Advertisement


