வாழையை வாடலில் இருந்து காக்க ஆலோசனை
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 8: வாழை பயிரில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிரை வேர் பகுதி தவிர அனைத்தையும் அழித்து விட வேண்டும். அவ்விடத்தில் 2 கி.கி சுண்ணாம்பு தூள் போட வேண்டும். வேர் பகுதியில் துளையிட்டு 60 மிகி கார்பன்டசிம் மருந்து நிரப்பப்பட்ட காப்சூல் குப்பியை உள்ளே செலுத்த வேண்டும். அல்லது 20 மிகி சூடடோமோனஸ் என்ற உயிரியல் காரணியை மேற்குறிப்பிட்ட முறையில் செலுத்த வேண்டும். சிக்கடோக்கோ இலைப்புள்ளி நோய்க்கு போர்டோ கலவை அல்லது கார்பன்டசிம் 1 லி நீரில் 1 கிராம் வீதம் கலந்து இலைகள் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். அசுவினி தாக்குதலுக்கு 1 லி நீரில் 2 மிலி மிதைல் டெமட்டான் அல்லது மோனோக்குரோடாபாஸ் லிட்டருக்கு 1 மிலி என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement