தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும்

விருதுநகர், ஆக.8: மண் பரிசோதனை மேற்கொள்ளும் முறை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மண் மாதிரி மண் ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால்தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும் அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில்தான் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

ஒரு நிலத்தின் மண் வெவ்வேறாக இருந்தால் தனித் தனியாக மாதிரி எடுக்க வேண்டும். எரு குவித்த இடம், வரப்பு வாய்க்கால் அருகில் மற்றும் மர நிழலில் மாதிரி எடுக்கக் கூடாது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியே மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கப்படும் இடத்திலுள்ள இலை, சருகு, புல் ஆகியவைகளை மேல் மண்ணை செதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மண் மாதிரியுடன் விவசாயி பெயர் மற்றும் அஞ்சல் முகவரி, கிராமத்தின் பெயர், நிலத்தின் பெயர், இறவை அல்லது மானாவாரி, பயிரிடப்பட்ட முன் பயிர் அடுத்து பயிரிடப் போகும் பயிர் பிரச்சனை இருப்பின் அதன் விபரங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.