Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புது வீடு கட்டி வந்தவர் மின்சாரம் தாக்கி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 2: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி முத்து (48). இவரது மனைவி ராஜேஸ்வரி. மீனாட்சி முத்து அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் கட்டிடத்திற்கு தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனாட்சிமுத்து மீண்டு திடீரென மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரனை நடத்தி வருகின்றனர்.