Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பார்க்கிங் தகராறு முதியவர் மீது தாக்குதல்

மானாமதுரை, ஜூன் 19: மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலு(60). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் பாலமுருகன்(48). தனது இருசக்கர வாகனத்தை பாதையை மறைக்கும் வகையில் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு பாலு சொல்லிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் கல்லை எடுத்து பாலுவை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலுவின் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

படுகாயமடைந்த பாலு மீட்கப்பட்டு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின்ேபரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.