தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்துக்காக முதியவர் கழுத்தை நெரித்து கொலை

வானூர், நவ. 12: வானூர் அருகே சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகள் கணவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியை சேர்ந்தவர் கலிவரதன் (73). இவர் கடந்த 9ம் தேதி வானூர் தாலுகா விநாயகபுரம் சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் பிணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக கலிவரதன் மனைவி ருக்மணி வானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கலிவரதன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதன் அடிப்படையில் போலீசார் கலிவரதன் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். வளர்ப்பு மகளான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்த லதா (27), அவரது கணவர் சக்திவேல் (40) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கலிவரதன் அவருக்கு சொந்தமான இடத்தை வளர்ப்பு மகள் லதாவின் பெயரில் எழுதி வைத்துள்ளார். தற்போது கலிவரதனை அவர்கள் சரிவர கவனிக்காததால் எழுதிய நிலத்தை மீண்டும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கலிவரதனை கழுத்தை நெரித்ததாகவும், இதனால் மயக்கமடைந்த அவரை வானூர் அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தில் எடுத்து வந்து போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கணவன், மனைவி இருவர் மீதும் வானூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகள் கணவனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement