தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் சடலங்களை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

 

Advertisement

திருத்தணி, அக். 7: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மயானத்திற்கு சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதியின்றி 30 ஆண்டுகளாக பொதுமக்கள் சடலத்தை விவசாய நிலங்களின் வரப்பு மீது சுமந்து செல்லும் அவல நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட குமாரகுப்பம் அருந்ததி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகிலேயே மயானம் உள்ளது.

இருப்பினும் சாலை வசதி இல்லாத நிலையில், விவசாய நிலங்களின் வரப்பு மீதே சடலங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்தார். மாலை அவரது சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஊர்வலமாக விவசாய நிலங்களின் வரப்பு மீது மயானத்திற்கு எடுத்துச் செல்ல கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து, கிராமமக்கள் கூறுகையில் 30 ஆண்டுகளாக எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள மயானத்திற்கு சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாத நிலையில் வரப்பு மற்றும் விவசாய நிலங்களில் எடுத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாய நிலங்களில் சடலம் எடுத்துச்செல்ல விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் பலமுறை வழங்கினோம்.

விவசாயிகள் ஒருசிலர் சாலை அமைக்க நிலம் தர முன் வருகின்றனர். இருப்பினும், அரசு உரிய முயற்சி எடுத்து நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதால், 30 ஆண்டுகளாக இறுதி ஊர்வலத்திற்கு சாலை வசதியின்றி அவதிப்படுவதாக அருந்ததி காலனி மக்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு சென்று வர சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News